தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல்இ இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியிருக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 15 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றது.
அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு மையத்தின் பணிப்பாளர் லச்மன் ஹ_லுகல்ல ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினருடன் திருகோணமலையில் உள்ள வாக்குகள் கணக்கிடும் நிலையத்திற்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் "சமாதானம்" எனப்படும் தமது தயாரிப்பு எறிகணைகளை ஏவியிருந்தனர். இதனால் மணிக்கு 30-40 பேரை சிறிலங்கா இராணுவம் இழந்திருந்தது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தெரிவாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (13.05.08) தீவிரமாக இறங்க உள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் இன்று திருகோணமலையில் சேதமாக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது.
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக உணவுத்திட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று உலக உணவுத்திட்ட அமைப்பின் சிறிலங்காவிற்கான பிரதிப் பணிப்பாளர் ஜூன் வெஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர எல்லையைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும்ää நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.